.
 
 

ஓர் ஆறுதல் வார்த்தை சொல்ல முடியுமா?
'பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா' 31-03-2010

ஆடு, மாடு, நாய், பூனை, கோழி என எந்த வளர்ப்புப் பிராணியும் இல்லாத வீடுகளை நீங்கள் ஒரு தடவை எண்ணிப் பாருங்கள். அதுவும் வன்னியில் அப்படி இருக்கிறது என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். மேற்கு வன்னியில் - பூநகரி, முழங்காவில், ஜெயபுரம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், வலைப்பாடு என்று எந்த இடத்திலும் நீங்கள் ஒரு கோழியைக் காண மாட்டீர்கள். ஒரு ஆடோ, ஒரு மாடோ அங்கே கிடையாது. எங்கேனும் ஒரு நாயை அபூர்வமாக நீங்கள் காணலாம். ஆனால் அந்த நாயும் அங்கே இருக்கும் யாருடையதாகவும் இருக்காது. அநேகமாக அது அங்கே இருக்கும் படையினரின் நாய்தான். >>>>>

கிளிநொச்சி நகரம் எப்படியிருக்கிறது? ஒரு களக்காட்சி
'பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா' 14-03-2010

கிளிநொச்சி நகரத்தில் இப்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கியுள்ளது சனப் புழக்கம். பாழடைந்திருக்கும் அந்த நகரத்தில் மறுபடியும் சனங்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிதைவுகளும் அழிவுகளுமாக இருக்கிற நகரத்தில் 'இனி என்ன செய்வது?' என்று தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டேன். படையினர்களுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் நாளாந்தத் தேவைகளுக்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
>>>>>

சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்
வீரகேசரி இணையம் 16-12-2009

உலகளாவிய ரீதியில் விசேட தேவையுடையோர் (வலது குறைந்தோர்) தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் எமது நாட்டை பொறுத்தவரையில் இவர்களின் விகிதாசாரம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதற்கு யுத்தம், வீதி விபத்துகள், வறுமை, போஷாக்கின்மை, வன்முறை, இரத்த உறவு திருமணங்கள் போன்றவற்றைக் காரணமாகக் கூறலாம். >>>>>>

 
 
English