.
 
 

19வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச் செய்தி 3.07.2016

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 19வது தமிழர் விளையாட்டு விழா 3-07-2016 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த சென் செந்தெனிஸ் மாகாண அவைத் தலைவர் திரு. ஸ்ரிபன் துரூசல், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. மரி ஜோர்ஜ் பூவே, கார் து கோணேஸ் துணை நகரபிதா சேர்ஜியா மகேந்திரன், ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், புளோமினல் நகரமன்ற உறுப்பினர் ஸ்ரிபனி சுரேந்திரன், நாடுகடந்த அரச பிரதநிதிகளான, அவைத்தலைவர் திரு. பாலச்சந்திரன், திரு. கலையழகன், திரு. மைந்தன், பிரித்தானியாவில் இருந்து வருகைதந்த நாடுகடந்த அரச பிரதநிதிகளான திரு. லோகலிங்கம், திரு. மணிவண்ணன் தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், தமிழ்ச் தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வருகை தந்த மக்கள் அனைவரும், திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் நெறியாள்கையில் தமிழர்களின் பாரம்பரிய இசைநடனமான இனியம், உமா கலைக்குழு கலைஞர்களின் குதிரையாட்டம் மற்றும் ஈழமண் வாசனைக்கலைஞர்களின் பறைவாத்திய இசை முழங்க மைதானத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் வரை அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரதான பொதுச்சுடரினை மாவீரர் மேஜர் அற்புதம் அவர்களின் சகோதரன்  திரு. கதிர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியினை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. மரிஜோர் புவே, தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை த.பு.க உறுப்பினர் திரு. சுரேந்திரன், ஐரோப்பிய பாராளுமன்ற கொடியினை சென் செந்தெனிஸ் மாகாண அவைத் தலைவர் திரு . ஸ்ரிபன் துரூசல், ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தாயகவிடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு ,  மாவீரர் நினைவுப்பாடலும் ஒலிக்கப்பட்டது.
தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த மங்கள விளக்கினை கார் கார் து கோணேஸ் துணை நகரபிதா சேர்ஜியா மகேந்திரன், ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், புளோமினல் நகரமன்ற உறுப்பினர் ஸ்ரிபனி சுரேந்திரன், நாடுகடந்த தமிழீழ அரசு பிரதநிதிகளான திரு. பாலச்சந்திரன், திரு. மைந்தன், திரு. லோகலிங்கம், திரு. மணிவண்ணன், தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் தலைவர் திரு. கோணேஸ்வரன்,ஆகியோர் எற்றி வைத்தனர்

பாரம்பரிய பறைவாத்திய இசை வழங்கிய கலைஞர்கள், இனியம் குழுவினர், உமா கலைக்குழு கலைஞர்கள், நடன ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மதிப்பழிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவிற்கான விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.

தமிழர் விளையாட்டு விழா 2016 உதைபந்தாட்ட போட்டியில் 16 அணிகளும், துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டியில் 24 அணிகளும், கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 13அணிகளும்,  பங்குபற்றியது, ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்ளேனம், பிரான்ஸ் தமிழர் துடுப்பாட்ட சம்மேளனம், பிரான்ஸ் தமிழர்  கரப்பந்தாட்ட சம்மேளனம், இப்போட்டிகளை நாடாத்தி உறுதுணை வழங்கியது.  தாச்சிப்போட்டி, கயிறுழுத்தல் போட்டிகளில் பல அணிகளும், கலந்துகொண்டு பங்குபற்றி சிறப்பித்தனர்.

அரங்க நிகழ்வாக யதீஸ்வரா இசைக்குழுவின் இன்னிசை கானங்கள், பார்வையாளர்கள் கலந்கொள்ளும் நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி, றெஜிஸ் நடனக்குழுவின் துள்ளிசை நடனம். தமிழர் புனர்வாழ்வுக்கழக கலைக்குழுவினரின் நடிப்பில்  அமோக விளைச்சல் நாடகம்,  திருமதி.யூலியன் அமெலி அவர்களின்  நெறியாள்கையில் தெருக்கூத்து வடிவிலான இயல் இசை நாடக நளினங்கள் ஊர்வலம் மக்களது கரகோசத்தையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டது.

சாக்கோட்டம், முட்டியுடைத்தல், கலையணைச் சண்டை, சங்கீதக் கதிரை, ஈருருளி மெது ஓட்டம், குறிபார்த்துச் சுடுதல் மற்றும் ஜனரஞ்சகப் போட்டிகளுடன் சிறுவர் விளையாட்டுக்களும்,  கராட்டி  காட்சி விளையாட்டும் இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதாக்கள், நகரசபை உறுப்பினர்கள், போராளிகள், நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், துறை சார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வெற்றியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

வர்த்தக நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலிகள், அரசியல் அமைப்புக்கள், சமூக நலன் பேணும் அமைப்புக்கள் தங்கள் விளம்பர காட்சி அறைகளை நிறுவி மக்களை கவர்ந்திழுத்தனர்.

இவாண்டிற்கான உள்நுழைவுச் சீட்டு நல்வாய்பில் 671 என்ற இலக்கம் குலுக்கல் மூலம் உந்துருளிக்கு தெரிவாகியது. அதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்குகின்றது.

தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களோடு ஒன்று படவும் ஓரு நாள் மகிழ்வாக இளைப்பாறவும், வறுமையில் வாழும் தாயக மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவிற்கு இவ்வாண்டும், கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது குடும்பம் குடும்பமாக  இணைந்துகொண்ட எமது மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தன்னலன் கருதாத தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தொண்டர்கள் மற்றம் சமூக ஆர்வலர்களின் அரிய சேவையினூடா முன்னெடுக்கப்பட்ட விழாவில் பெரியவர்கள்,  சிறுவர்கள், விருந்தினர்கள் உட்பட 5 000ற்கும் மேற்பட்ட மக்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். விழா இரவு 10 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் .

குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட இலக்கம் - 671

 
 
English