.
 
 

பத்திரிகைச்செய்தி
30.10.2017

இசைசாகரம் மாணிக்கம் யோகேஸ்வரன், இசை ஆசிரியை திருமதி ராதா ஸ்ரீதரன், ,இசையமைப்பாளர் சாய்தர்சன் கண்ணன் ஆகியோர் நடுவார்களாகக் கலந்து கொண்ட இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2017

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 10வது ஆண்டாக நடாத்திய கர்நாடக சங்கீதம் , திரையிசைப்பாடல், இசைத்திறன் போட்டி நிகழ்சி 28-29 ஐப்பசி 2017, சனி ,ஞாயிறு ஆகிய தினங்களில் செவ்றோன் நகரசபை விளையாட்டரங்க மண்டபத்தில் நடைபெற்றது.

பொதுச் சுடரினை இயக்குனர் ஈழத்தமிழ்விழி, திரு. பரராஜா அவர்கள் ஏற்றிவைக்க, தாயக விடுதலைக்காக தமது இனிய உயிர்களை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, மங்கள விளக்குகளை மகேந்திர சுவாமிகள், கலைஞர் தனபால், இசை ஆசிரியர்களான திருமதி. ஜீவராஜா சாருமதி, சிவகெளரி கனானந்தன் ஆகியோர் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அதிகீழ்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய பிரிவுகளில் நாற்பதுக்கு மேற்பட்ட போட்டியாளர்களும், குழுப்போட்டியில் 7 குழுவினரும் பங்குபற்றினர். யேர்மனி நாட்டில் இருந்து இசைசாகரம் மாணிக்கம் யோகேஸ்வரன், பிரான்ஸ் நாட்டில் இருந்து இசை ஆசிரியை திருமதி. ராதா ஸ்ரீதரன், தாயகத்தில் இருந்து இசையமைப்பாளர் சாய்தர்சன் கண்ணன் அவர்களும் நடுவர்களாக கடமையாற்றினர்.

கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டியாளர்களுக்கான பக்கவாத்திய இசையினை மிருதங்க ஆசிரியர் திரு. பிரின்ஸ் அன்ரு அவர்களும், அவருடைய மாணவர்களும் இணைந்து வழங்க இவர்களோடு வயலின் வாத்தியத்தினை ஆசிரியர் கோமளா கந்தையா அவர்களின் மாணவன் பரமேஸ்வரலிங்கம் பிரகாஷ் அவர்களும் இணைந்து வழங்கினர். அரங்கம் நிறைந்த கரகோசத்துடன் அன்றைய போட்டிகள் சிறப்பான இசைவிருந்தாக இரவு 9.00 மணிக்கு நிறைவுற்றது.

திரையிசைப்பாடல் போட்டிக்கான நிகழ்வில் ஞாயிறு மதியம் 13.00 மணிக்கு வரவேற்பு நிறைகுட விளக்குகளை புனர்வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர்களான திருமதி சந்திரிக்கா தேவராஜா, திருமதி நிர்மலாதேவி தங்கத்துரை ஆகியோர் ஏற்றிவைத்தார். பொதுச் சுடரினை புனர்வாழ்வுக் கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு. ஜெயசூரியர் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தாயக விடுதலைக்காக தமது இனிய உயிர்களை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

ஆரங்கின் மங்கள விளக்குகளை ரான்சி நகரமன்ற உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், நாடுகடந்த அரசவைத் தலைவர் திரு. பாலச்சந்திரன், ஆசிரியரான சுவர்ணமகால் உரிமையாளர் திரு. பரமானந்தம், இசை ஆசிரியை திருமதி சைலஜா டியூட்டர், நடன ஆசிரியர் இராஜலிங்கம் மஞ்சுளா, த. பு. க. பிரான்ஸ் உறுப்பினர்களான திரு பாலசிங்கம் மற்றும் திரு. அருளானந்தம் ஆகியோர் இணைந்து ஏற்றி வைத்தனர்.

ஆசியுரையினை சிவன்கோவில் பிரதம குரு சிவசுதக்குருக்கள் அவர்களும் , சிறப்புரையினை அனைத்துலக தொடர்பக பொறுப்பாளர் திரு. நாயகன் அவர்களும் வழங்கினர்.

திரையிசைப்பாடல் போட்டியாளர்களுக்கான பக்கவாத்திய இசையினை பாரிஸ் சுப்பர்ரீயுணர் இசைக்குழுவினர் வழங்கினர். சிறப்பு நிகழ்வாக நடுவர்களில் ஒருவரான சாய்தர்சன் கண்ணன் அவர்களின் இசையோடு , கடந்த நிகழ்வுகளில் சிறப்பு பரிசினை தட்டிச்சென்ற நிசாங்கனி , திசானிகா இணைந்து , பாடல் வழங்க இளைய தலைமுறைக் கலைஞரான செந்தூரனின் புல்லாங்குழல் இசையோடு இனிய இசைவிருந்து வழங்கியிருந்தனர்.

பிரான்ஸ் மண்ணில் வாழும் நாம், தமிழ் பேசும் நல்லுலகம் ஏற்கனவே அறிந்தபடி, வருடாவருடம், எமது சமூகத்தில் எந்த விதத்திலாவது சிறந்த பாத்திரம் வகித்து வாழும் ஒருவரையும், வாழ்ந்த அமரர் ஒருவரையும், இனம் கண்டு, அவர்களை ஈழத்தின் கண்கள் எனப்பாவித்து, 'ஈழத் தமிழ் விழி' என்கிற விருது கொடுத்து, கௌரவித்து வருகின்றோம்.

அந்தவகையில் 2017ம் ஆண்டுக்கான 'ஈழத்தமிழ்விழி' விருது 'இராகசங்கமம்' நிகழ்ச்சியில், திரண்ட மக்கள் முன்பாக, தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான அமரர் வீரசந்தானம் அவர்களுக்கு, தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் வடித்து ஈழத் தமிழர்களை ஆற்றுகைப்படுத்திய சேவையினைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கும், பிரான்ஸ் மண்ணில் கிராமிய பண்போடு வருங்கால பெண் கலைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக கலைப்பணி ஆற்றி வருவதை பாராட்டி திருமதி கவிரட்ணசிங்கம் புனிதமலர் அவர்களுக்கும் வழங்கி மதிப்பழிக்கப்பட்டது. மதிப்பளிப்பு உரையினை அறிவிப்பாளர் திரு. லோகதாஸ் அவர்கள் நிகழ்தினார்.

அத்துடன் இந்நிகழ்வில் தமது மாணவர்களைப் பங்கு பெற வைத்த இசை ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்

இரண்டு நாள் போட்டிகளிலும் பங்குபற்றிய போட்டியாளர்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சான்றிதழ்களையும், வெற்றிக்கிண்ணங்களையும் திருமதி. தர்சினி மற்றும் நடுவர்கள் வழங்கி போடியாளர்களை ஊக்குவித்தனர். இரண்டு போடிகளிலும் பங்குபற்றி இராகசங்கமம் 2017ன் சிறப்பு பாடகியாக செல்வி தெய்வேந்திரகுமார் லக்சா தெரிவாகினார். வெற்றியாளரின் சிறப்பு பரிசினை பத்திரகாளி அம்மன் ஆலய பூசகர் திரு. மகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். இப்பரிசினை பத்திரகாளி அம்மா தேவஸ்தானம் வழங்கியது. அதுமட்டுமின்றி பரிசீலிருந்து லூர்ட்ஸ், அண்டோரா சென்று வருதற்கு இவருக்கான பிரயானச் சீட்டும் ITR வானொலி நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஒலி அமைப்பு அருள் சொனோ, வீடியோ படப்பிடிப்பு ஹரிதா வீடியோ சிஸ்டம், நிழற்படப் பிடிப்பு தீபன் போட்டோ ஸ்டூடியோ, மேடை அலங்காரம் ஸ்ரீபிரம்ம டெக்கோ ரமேஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு உறுதுணை வழங்க, நிகழ்சித் தொகுப்பினை திரு. அருள்மொழித்தேவன், திரு. சுரேஸ், திரு. லோகதாஸ், திரு. குருபரன், திரு. சுதர்சன் இவர்களுடன் பிரெஞ்சு மொழியில் ஆரம்ப நிகழ்வினை செல்வி காயத்திரி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

சங்கீத ஆசிரியர்கள், மாணவர்கள், வர்த்தக பெருமக்கள், தமிழ் தேசிய விடுதலை செயற்பாட்டாளர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள், தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், தமிழ் உணர்வாளர்கள், கலாரசிகப்பெருமக்களின் பேராதரவோடு இரவு 10 மணிக்கு இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2017 இனிதே நிறைவுபெற்றது. நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்க கழகம் பிரான்ஸ்

2017ம் ஆண்டு நடந்த இரகசங்கமம் நிகழ்வில் வெற்றி பெற்றோர் விபரம்

அதி கீழ்ப்பிரிவு
சங்கீதப் பாடல் 
1ம் இடம் : இதயமூர்த்தி வாசகி 
2ம் இடம் : அன்ரன் லியோன் சேரூபா 
3ம் இடம் : சத்தியநாதன் அமலியா

திரையிசைப் பாடல் 
1ம் இடம் : சத்தியநாதன் அமலியா 
2ம் இடம் : இதயமூர்த்தி வாசகி 
3ம் இடம் : ஜீவராஜா பிரஷாந்தினி

கீழ்ப்பிரிவு
சங்கீதப் பாடல் 
1ம் இடம் : ஜீவராஜஹ் பிரிதியங்கரா 
2ம் இடம் : மதிவாணன் அஷ்விதா 
3ம் இடம் : ஜான்சன் ஜெரினா

திரையிசைப் பாடல் 
1ம் இடம் : தெய்வேந்திரகுமார் லக்சா 
2ம் இடம் : நவநீதன் ஜாழவன் 
3ம் இடம் : ஜான்சன் ஜெரினா

மத்தியபிரிவு
சங்கீதப் பாடல் 
1ம் இடம் : ஸ்ரீதரன் ஆரபி 
1ம் இடம் : ஸ்ரீசுதேஸ்கரன் வருஷினி 
2ம் இடம் : மதிவாணன் ஆயினி
3ம் இடம் : உதயகுமார் உவானா

திரையிசைப் பாடல் 
1ம் இடம் : விஜேந்திர அக்சயன் 
2ம் இடம் : உதயகுமார் உவானா 
3ம் இடம் : ஸ்ரீதரன் ஆரபி

மேற்பிரிவு
சங்கீதப் பாடல் 
1ம் இடம் : சகாதேவன் பானுஜா
2ம் இடம் : சகாதேவன் சிந்துஜா
3ம் இடம் : அருந்தவராசா அஜித்

திரையிசைப் பாடல் 
1ம் இடம் : சகாதேவன் சிந்துஜா
2ம் இடம் : சகாதேவன் பானுஜா
3ம் இடம் : கோகுலதாஸ் சூர்யா

அதிமேற்பிரிவு
சங்கீதப் பாடல் 
1ம் இடம் : ரதி ஜெயாழன்
2ம் இடம் : இராஜலிங்கம் ரொஷான்
3ம் இடம் : கலைச்செல்வன் பஞ்சுதா

திரையிசைப் பாடல் 
1ம் இடம் : இராஜலிங்கம் ரொஷான்
2ம் இடம் : கருணைநாதன் அஜன்
3ம் இடம் : ரதி ஜெயாழன்

இரு போட்டிகளிலும் பங்குபெற்று, சிறப்புப் பாடகியாக தேர்ந்தெடுக்கப்படடவர் செல்வி தெய்வேந்திரகுமார் லக்சா

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் விளையாட்டுவிழா ஏற்பாட்டுக்குழு,
தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
தொடர்புகட்கு: 01 40 38 30 74

 
 
English