.
 
 

பத்திரிகைச்செய்தி
23.10.2016

யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் கலாவித்தகர் , இசைமாணி தவநாதன் றொபேட், கலாநிதி இராஜராயேஸ்வரி பரிசோ ஆகியோர் நடுவராக கலந்து கொண்ட இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2016

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 9வது ஆண்டாக நடாத்திய கர்நாடக சங்கீதம் , திரையிசைப்பாடல், இசைத்திறன் போட்டி நிகழ்சி 22-23 ஐப்பசி 2016, சனி பனியோலே கத்தோலிக்க தேவாலய மண்டபத்திலும், ஞாயிறு மார்க்ஸ் தொர்மி தேவாலய மண்டபத்திலும் நடைபெற்றது.

சனிக்கிழமை கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டி நிகழ்வின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திருமதி. சிவகௌரி கணநாதன், திருமதி சைலஜா டியூட்டர், திருமதி. சாருமதி விஜயேந்திரா, திருமதி. ராஜரூபி சிறிகாந்தன், திருமதி. திருஜமுனா ஆறுமுகம் ஆகியோர் இணைந்து 12.00 மணிக்கு ஏற்றிவைத்தனர். அதனைத்தொடர்ந்து பொது சுடரினை தமிழ்ச்சங்க பிரதிநிதியும், புனர்வாழ்வுக் கழகத்தின் உறுப்பினருமான திரு. பாய்க்கியநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தாயக விடுதலைக்காக தமது இனிய உயிர்களை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அதிகீழ்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, சிறப்புப்பிரிவு ஆகிய பிரிவுகளில் நாற்பதுக்கு மேற்பட்ட போட்டியாளர்களும், குழுப்போட்டியில் 9 குழுவினரும் பங்குபற்றினர். எமது தாயகத்தில் இருந்து கர்நாடகசங்கீத இசைத்திறன் போட்டி நிகழ்சிக்கு கலாவித்தகர், இசைமாணி தவநாதன் றொபேட் (முதுநிலை விரிவுரையாளர் இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும் பிரான்ஸ் நாட்டில் இருந்து இசைத்துறை, கலாநிதி இராஜராயேஸ்வரி பரிசோ அவர்களும் நடுவர்களாக கடமையாற்றினர்.

கர்நாடகசங்கீத இசைத்திறன் போட்டியாளர்களுக்கான பக்கவாத்திய இசையினை மிருதங்க ஆசிரியர் திரு. பிலிப் அன்ரு அவர்களும், அவருடைய மாணவர்களும் இணைந்து வழங்க இவர்களோடு வயலின் வாத்தியத்தினை ஆசிரியர் கோமளா கந்நையா அவர்களின் மாணவி செல்வி க. ஜெயனா அவர்களும் இணைந்து வழங்கினர். அரங்கம் நிறைந்த கரகோசத்துடன் அன்றைய போட்டிகள் சிறப்பான இசைவிருந்தாக இரவு 9.00 மணிக்கு நிறைவுற்றது.

திரையிசைப்பாடல் போட்டிக்கான நிகழ்வில் ஞாயிறு மதியம் 13.00 மணிக்கு வரவேற்பு நிறைகுட விளக்குகளை புனர்வாழ்வுக் கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு திருமதி ஜெயசூரியர் ஜெயராணி தம்பதியினர் ஏறிவைத்தனர், பொது சுடரினை தமிழ்ச்சங்க தலைவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உறுப்பினருமான திரு. தங்கத்துரை ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தாயக விடுதலைக்காக தமது இனிய உயிர்களை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

ஆரங்கின் மங்கள விளக்குகளை கார் து கோணேஸ் துணை நகரபிதா சேர்ஜியா மகேந்திரன், பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் எஸ். கே. ராஜன், ஆசிரியர் திரு.கனகசபை அரியரட்ணம், சுவர்ணமகால் உரிமையாளர் திரு. பரமானந்தம், சாமியா காசன் கறி உரிமையாளர் திரு. தயாபரன், ஆகியோர் இணைந்து ஏறிவைத்து, வாழ்த்துக் கூறி ஆரம்பித்து வைத்தனர். ஆசியுரையினை சிவன்கோவில் பிரதம குரு சிவசுதக்குருக்கள் அவர்கள் வழங்கினர்.

திரையிசைப்பாடல் போட்டியாளர்களுக்கான பக்கவாத்திய இசையினை பாரிஸ் சுப்பர்ரீயுணர் இசைக்குழுவினர் வழங்கினர்.

பிரான்சு மண்ணில் வாழும் நாம், தமிழ் பேசும் நல்லுலகம் ஏற்கனவே அறிந்தபடி, வருடாவருடம், எமது சமூகத்தில் எந்த விதத்திலாவது சிறந்த பாத்திரம் வகித்து வாழும் ஒருவரையும், வாழ்ந்த அமரர் ஒருவரையும், இனம் கண்டு, அவர்களை ஈழத்தின் கண்கள் எனப்பாவித்து, 'ஈழத் தமிழ் விழிகள்' என்கிற விருது கொடுத்து, கௌரவித்து வருகிறோம்.

அந்தவகையில் 2016ம் ஆண்டுக்கான 'ஈழத்தமிழ் விழி விருது இராகசங்கமம் நிகழ்ச்சியில், திரண்ட மக்கள் முன்பாக, முன்னாள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட வீரர், நாட்டுப்பற்றாளர் திரு. செபஸ்ரியன் நிக்கிளஸ் யோசப் அன்ரனிப்பிள்ளை அவர்களுக்கும் பேராசிரியர் கலாநிதி சதாசிவம் சச்சிதானந்தம் அவர்களுக்கும் வழங்கி மதிப்பழிக்கப்பட்டது.

மதிப்பளிப்பு உரையினை ஆசிரியர் திரு. கனகசபை அரியரட்ணம், அவர்களும், ரான்சி நகரசபை உறுப்பினர் திரு அலன் ஆனந்தன் அவர்களும் நிகழ்தினர்.

ஈழத்து நாடக மாமேதை இளய பத்மநாதன் அவர்கள், « ஈழத்தமிழ் விழி » பரராஜசிங்கம் அவர்கள், திருமதி. செல்வி சுரேன் அவர்கள், ஆர்க் ரெலிக்கோம் நிறுவன அதிபர் திரு. விஜிதரன் அவர்கள் நடுவர்கள், வாத்தியக்கலைஞர்களுக்கான மதிப்பளிப்பினை வழங்கிவைத்தனர்.

இரண்டு நாள் போட்டிகளிலும் பங்குபற்றிய போட்டியாளர்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சான்றிதழ்களையும், வெற்றிக்கிண்ணங்களையும் நாடுகடந்த தமிழீழ அரசு அவைத்தலைவர் திரு. பாலச்சந்திரன், அனைத்துலக தொடர்பக பொறுப்பாளர் திரு. நாயகன், போராளிகள் கட்டமைப்பு பிரதிநிதி திருமதி. உமா மற்றும் நடுவர்கள் வழங்கி போடியாளர்களை ஊக்குவித்தனர். இரண்டு போடிகளிலும் பங்குபற்றி இராகசங்கமம் 2016ன் சிறப்பு பாடகியாக செல்வி திசானிகா திலிப்குமார் தெரிவாகினார். வெற்றியாளரின் சிறப்பு பரிசினை பத்திரகாளி அம்மன் ஆலய சிவாச்சாரியார் திரு. மகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். இப்பரிசினை பத்திரகாளி அம்மா தேவஸ்தானம் வழங்கியது.

இந்நிகழ்வின் ஒலி அமைப்பு அருள் சொனோ, வீடியோ படப்பிடிப்பு சுமன், நிழற்படப் பிடிப்பு யாழ் எப் எம் .தீபன், மேடை அலங்காரம் பேபி பலூன் மற்றும் அழகன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு உறுதுணை வழங்க, நிகழ்சி தொகுப்பினை திரு. அருள்மொழித்தேவன், திரு. சுரேஸ் மற்றும் திருமதி நிசாந்தி சிறிதரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

சங்கீத ஆசிரியர்கள், மாணவர்கள், வர்த்தக பெருமக்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள், கலாரசிகப்பெருமக்களின் பேராதரவோடு இரவு 9 மணிக்கு இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2016 இனிதே நிறைவுபெற்றது. நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

 
 
English