தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 19வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா பத்திரிகைச் செய்தி 17-03-2019

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 19வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 17.03.2019 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois)நகரசபை விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

Salangai

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு.திருமதி சிவதாஸ் தம்பதியினர் ஏற்றி வைத்தனர். தாயகவிடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடரினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் திரு. தர்மலிங்கம் கோணேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

15.03.2019  சாவடைந்ததமிமீழ விடுதலையை நேசித்த பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு. ஆலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நினைவுச்சுடரினை திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவீரர்களையும்போரினாலும்இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும்பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வு ஆரம்பமாகியது.

அரங்கின் மங்கள விளக்குகளை நடன ஆசிரியர்கள் இணைந்து ஏற்றி வைத்தனர்.

அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவொலியுடன் பிரான்சில் புகழ்பூத்த இருபத்தேழு நடன ஆசிரியர்களின்முன்னூற்றம்பதுக்கு மேற்பட்ட நடன மாணவ மாணவிகளின் 39 நடன வடிவங்கள் மேடையேற்றப்பட்டன. அனைத்து நடன மாணவ மாணவிகளும் ஓருவர்க்கு ஒருவர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி குருவிற்கும்,தமை ஈன்ற பெற்றோர்க்கும்தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

தாயகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் விபரணம் திரையிடப்பட்டது வரவேற்புரையினை பேச்சாளர் திருமதி சுபா குருபரன் வழங்கினார். பத்திரகாளி தேவஸ்தான பூசகர் திரு. மகேந்திரன்திரு.நாயகன்திரு ஜெயசந்திரன்திரு.அலன் ஆனந்தன்திரு. ரவிசங்கர் ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.

பரதவிழா இங்கு வாழும் எமது இளையோரின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே,. பரதவிழாவினூடாக எமது தாயக உறவுகள் பயன்பெறுகின்றார்கள். அந்த பெருமையெல்லாம் நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெற்றோரையும் வருகை தந்த மக்களையும்  தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்களையுமே சாரும்.

இந்நிகழ்வில் ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை துணை நகரபிதாஒல்னே சுபுவா நகரமன்ற உறுப்பினர்கள்இரான்சி நகரமன்ற உறுப்பினர் , செந்தெனிஸ் நகரமன்ற உறுப்பினர் நாடுகடந்த அரச பிரதநிதிகள் தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும்தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் நடன மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி உச்சாகப்படுத்தினர்.

அருள் சொனோ திரு.அருளானந்தன்தொழில்நுட்ப உதவி திரு. கரிகாலன் வீடியோ - சாண்றிம்  வீடியோயாழ் தீபன் போட்டோ ஆகியோரின் அனுசரணையில் ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபையின் ஆதரவில் இடம்பெற்ற பரதவிழா ஐனூறுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க , 21 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்