24வது தமிழர் விளையாட்டு விழா பிரான்ஸ் 2023 I ORT France | 30.07.2023

பத்திரிகை செய்தி 01.08.2023
நிழற்படங்கள்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் – பிரான்ஸ் இணைந்து நடாத்திய 24வது தமிழர் விளையாட்டு விழா 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை வழமையான L’Aire des Vents Dugny திடலில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வின் பிரதான பொதுச்சுடரினை லெப் கேணல் விக்ரர் அவர்களது  சகோதரரும், விளையாட்டுவிழாவின் விளையாட்டுக்களுக்கான பிரதான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான திரு. றொனி மருசலீன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை கரும்புலி கப்டன் கதிர்நிலவன் என அழைக்கப்பெற்ற சிவசுப்ரமணியம் நவீதன் அவர்களது சகோதரி திருமதி. விநாயகமூர்த்தி நாகபாலினி அவர்கள் ஏற்றிவைத்தார். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் சுடரினை சமூக செயற்பாட்டாளர் திருமதி. செல்வி சுரேந்திரகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார்.
(செய்தியை மேலும் படிக்க...)

தமிழர் விளையாட்டு விழா - 2022
பத்திரிகைச் செய்தி 26-07-2022

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - பிரான்ஸ் இணைந்து நடாத்திய 23வது தமிழர் விளையாட்டு விழா, கடந்த 24-07-22 ஞாயிற்றுக்கிழமை வழமையான L’Aire des Vents Dugny திடலில் சிறப்பாக நடைபெற்றது.

திடலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் தமிழர் தேசியக் கொடி, தேசியச் செயற்பாட்டாளர் திரு நாயகன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள், பொதுமக்கள், போரினால் மடிந்த சமூகசேவையாளர்கள் மற்றும் தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த தமிழ்நாட்டு உறவுகளையும் நினைவேந்தி அமைக்கப்பட்ட வணக்க நினைவுத் தூபியின் முன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பிரதான பொதுச்சுடரினை திருமதி. பாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
(செய்தியை மேலும் படிக்க...)

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா

பத்திரிகைச் செய்தி
28-02-20222

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 27.02.2022 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. >>>>>

ஆழிப்பேரலையின் 16ம் ஆண்டு சுனாமி நினைவு வணக்க நிகழ்வு,

தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிமனையில் 26-12-2020 அன்று 11.00 மணிக்கு, எமது விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அணர்த்தினாலும் சாவடைந்த மக்களையும், நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது.

பிரதான பொதுச்சுடரினை திரு. பேதுருபிள்ளை ஜெயசூரியர் ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து ஆழிப்பேரலையினால் சாவடைந்த மக்களுக்கான நினைவுச்சுடரும் மலர்வணக்கமும் இடம்பெற்றது.

இன்றய இடர்மிக்கு கொரோனா தாக்கத்தினால், பொது இடத்தில இந்நிகழ்வினை முன்னெடுக்க முடியவில்லை என்பதை அறியத்தருகின்றோம்.

எமது மக்களுக்கான புனர்வாழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 20வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா
பத்திரிகைச் செய்தி 17-02-2020

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 20வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 17.02.2020 அன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

சலங்கை 2020

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு. திருமதி ரவிக்காந் தம்பதியினர் ஏற்றி வைத்தனர். தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடரினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களையும், போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வு ஆரம்பமாகியது. >>>>>

Salangai2020

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 19வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா
பத்திரிகைச் செய்தி
 17-03-2019

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 19வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 17.03.2019 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois)நகரசபை விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

Salangai

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு.திருமதி சிவதாஸ் தம்பதியினர் ஏற்றி வைத்தனர். தாயகவிடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடரினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் திரு. தர்மலிங்கம் கோணேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

Adangapatru

21வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச் செய்தி 08-07-2018

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 21வது தமிழர் விளையாட்டு விழா 08-07-2018 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே (le Bourget , LAire des Vents Dugny) மைதானத்தில்  ஆரம்பமாகி நடைபெற்றது.

 தாயக விடுதலைக்காக தமது உயிரை அற்பணித்த மாவீரர்கள், போரினால் கொல்லப்பட்ட சமூகசேவையாளர்கள் மற்றும் மக்கள் நினைவாக 2009ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுத் தூவி முன்பாக பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பிரதான பொதுச்சுடரினை  தமிழர் விளையாட்டு விழா – விளையாட்டுக்குழு ஓருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.ரவிக்காந் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

28-06-2018 - IBC Tamil TV | தமிழர் விளையாட்டு விழா -சிறப்புபதிவு

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 18வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா
பத்திரிகைச்செய்தி
25.02.2018

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 18வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 25.02.2018 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு செவ்றோன் நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு.திருமதி தங்கத்துரை தம்பதியினர் ஏற்றி வைத்தனர். தாயகவிடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடரினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவீரர்களையும், போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வு ஆரம்பமாகியது.

 
மெலும் மற்றய செய்திகள்
English